மார்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் கே.வரதராஜன் அவர்கள் கரூரில் உள்ள அவரது மகள் வீட்டில் இன்று காலமானார்.
மார்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான தோழர் கே.வரதராஜன் அவர்கள் இன்று கரூரில் உள்ள அவரது மகள் வீட்டில் காலமானார். 73 வயதான அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்திருந்த நிலையில் இன்று அவர் இயற்கை எய்தினார்.
இவர் மார்க்சிஸ்ட் காட்சியின் பல்வேறு பதவிகளில் வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, முதலில் திருச்சி வட்டக்குழு செயலாளராக பணியாற்றினார்.அதன் பின்னர் தான் மாநில செயற்குழு உறுப்பினராக திறம்பட செயலாற்றினார்.
இவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் பதவிவகித்துள்ளார். அதன் பின்னர் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பணியை மேற்கொண்டுள்ளார். அதே விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தோழர் கே.வரதராஜன் தத்துவ தரிசனம் என்கிற நூலையும், கிராமப்புற விவசாய இயக்கம் தொடர்பான பல சிறு புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோழர் கே.வரதராஜனின் நல்லடக்கம் நாளை திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…