பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழா.!

Published by
பாலா கலியமூர்த்தி

முருகப்பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான தைப்பூச திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமி அஸ்திரத்தேவருக்கு சண்முகவிலாச மண்டபத்தில் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரத்தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்தபெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வடக்குரதவீதியில் தைப்பூச மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலையில் அங்கிருந்து சுவாமி எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினத்திலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தனர். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்து குழு குழுவாக கோயிலை வலம் வந்தனர். இதனால் கோயில் வளாகத்திலிருந்து நாலாபுறமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சில பக்தர்கள் அதிகாலையிருந்து கிரி பிரகாரத்தில் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

பின்னர் பக்தர்கள் கட்டண தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் கடற்கரை, சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தியும், பஜனை பாடல்களை படியும் வலம் வந்தனர். அதேபோல் கடற்கரையில் மணல் கோபுரம் எழுப்பி சூடம் ஏற்றி வழிபட்டனர். பால் குடம் மற்றும் காவடி எடுத்து வந்த பக்தர்கள் கோயில் முகப்பில் ஆடிப்பாடிய கோலாகலமாக கொண்டாடப்பட்டனர். கடலில் பக்தர்களுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு படகில் மீட்புக் குழவினர் நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் கோவிலை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது என குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

13 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

13 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

13 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

14 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

14 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

15 hours ago