அரசு வேலையில் சேர விரும்புவோர் தமிழ் பாடத்தில் 40%மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்- நிதியமைச்சர்..!

Published by
murugan

அரசு வேலையில் சேர விரும்புவோர் 10-வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் குறைந்தது 40%மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்ற அரசாணை குறித்து அமைச்சர் விளக்கம் கொடுத்தார். அதில், அரசு வேலையில் சேர விரும்புவோர் 10-வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் குறைந்தது 40%மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

80-க்கும் மேற்பட்ட தேர்வுகளை பணியாளர் தேர்வாணையம் நடத்துவதால் அதன் எண்ணிக்கையை குறைக்க பரிசீலனை. நிபுணர்களுடன் ஆலோசித்து தேர்வு முறையில் மாற்றம் செய்ய முடிவு. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பான கல்வி திட்டம் உள்ளது. கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களுக்கு அரசு வேலையில் வாய்ப்பு அதிகரிக்கும். அரசு பணி என்பது மிகவும் முக்கியம். அரசியல் தலைவர் பதவி என்பது நிரந்தரம் இல்லை.

தேர்தல் நடந்தால் பதவி மாறும் ஆனால் அரசு வேலை அப்படி இல்லை. 8 கோடி மக்கள் உள்ள இடத்தில் 9 லட்சம் பேர் மட்டுமே அரசு பணியில் உள்ளனர். தமிழ்நாட்டில் அரசுப் பணியில் அமரக்கூடிய அனைவரும் தமிழ் புலமையுடன் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் இடம் பெறும்.

தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சரால் செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளில் தமிழ் தெரியாதவர்கள் பணியமர்த்தப்பட்டனர். அந்த தவறுகளை சரிசெய்யும் வகையிலே தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Recent Posts

மகா கும்பமேளா – சங்கராச்சாரியார் மார்க் பகுதியில் பயங்கர தீ!

மகா கும்பமேளா – சங்கராச்சாரியார் மார்க் பகுதியில் பயங்கர தீ!

உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…

40 minutes ago

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி வாக்குமூலம்!

வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட…

1 hour ago

“சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ரோஹித் ஃபார்முக்கு வந்தால் வேற மாதிரியான கேப்டனைப் பார்ப்போம்”… சுரேஷ் ரெய்னா நம்பிக்கை.!

இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய…

1 hour ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…

3 hours ago

மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…

4 hours ago

LIVE : நெல்லையில் 2ம் நாளாக மு.க.ஸ்டாலின் கள ஆய்வு முதல் சென்னையில் கடும் பனிமூட்டம் வரை.!

சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…

5 hours ago