சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.25-க்குள் விருப்பமனு அளிக்கலாம் – தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Default Image

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்திலும், தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவித்துள்ளார். மார்ச் 5-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், பொதுத்தொகுதிக்கு விருப்பமனு கட்டணமாக ரூ.15,000-மும்,  தனித்தொகுதிக்கு ரூ.10000-மும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்