என்னை காயப்படுத்தினர்கள் -திமுகவில் இணைந்த அரசக்குமார் பேட்டி

Default Image

பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்தவர் பி.டி.செல்வகுமார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய காரணத்தால் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க பாஜக தடை விதித்தது.இதனை தொடர்ந்து   செல்வகுமார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,புதுக்கோட்டை திருமண விழாவில் யதார்த்த உண்மையைத்தான் வெளிப்படுத்தினேன், இதனால் சிலர் என்னை அருவெறுக்கத்தக்க வகையில் பேசினர்,உண்மையை பேசியதற்காக கடந்து சில தினங்களாக காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் என்னை பேசினர் .என்னை காயப்படுத்தினர்.என்னுடைய நலம் விரும்பிகள் இனி இங்கு இருக்க வேண்டாம்,நீங்கள் இணையவேண்டிய இடத்தில் நகர காலம் வந்துவிட்டது எனக்கூறி அழைத்ததன் அடிப்படையில் என்னை திமுகவில் இணைத்துக்கொண்டேன்

தமிழக பா.ஜ.க வில் இருந்து என்னை வெளியேற்ற நினைத்தவர்கள் தற்பொழுது மகிழ்ச்சியாக இருப்பார்கள்.ஆனால் அது நிரந்தரமல்ல.என்னை திமுக வில் தொண்டனாக இணைத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva
Amit Shah - Tamilisai Soundararajan
Minister Ponmudi