கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் கலவரம் செய்பவர்கள்..! அயோக்கியர்கள்..! – எம்.பி.ஜோதிமணி

Default Image

கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் கலவரம் செய்பவர்கள், அயோக்கியர்கள்.

தமிழகத்தில் பாஜக சார்பில், நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி இன்று வேல் யாத்திரை நடைபெற்றது.

 இந்த யாத்திரையில் ஈடுபட்ட, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கடவுளை வழிபடுபவர் பக்தர்கள். கடவுளை வாய்த்து அரசியல் செய்பவர்கள் அயோக்கியர்கள். அமைதியும், அன்பும், இணக்கமும் நிறைந்த தமிழ் மண்ணில் வான்முறை விதை ஊன்றப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்த கலவர கும்பலை தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை.’ என ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்