தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி குறித்து அவதூறான ஆடியோ வெளியிட்டவர் கைது!

Published by
லீனா

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி குறித்து அவதூறான ஆடியோ வெளியிட்டவர் கைது.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி குறித்து, முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த, கல்முருகன் என்ற வேல்முருகன் அவதூறான ஆடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் கல்முருகன், வ.உ.சி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பேசியுள்ளார்.

மேலும், அந்த ஆடியோவில், இந்த கல்லூரியில் தங்கள் சாதி மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்றும், மற்ற சாதி மாணவர்கள் எல்லாம் ஏன் வருகிறீர்கள் என்றும் இழிவுபடுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.

இவர் பேசிய இந்த ஆடியோ வாட்சப்பில் வைரலான நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இந்த ஆடியோ தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, போலீசார் இந்த ஆடியோ வெளியிட்ட கல்முருகன் என்ற வேல்முருகனை கைது செய்தனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தான், அடிதடி வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் தன்னுடைய சமூகத்தில், ஒரு சாதிய தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், தான் சாதியை முன்னிறுத்தி பேசியதற்காக, தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில், தங்களது கருத்தை பதிவிடுவதாக எண்ணி, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

22 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

22 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago