தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Default Image

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதனையடுத்து மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் இந்த வழக்கை முடித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மதுரையை சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

அந்த மனுவில் துப்பாக்கிசூடு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கிசூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்து, தேசிய மனித உரிமை ஆணைய புலன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையிட்டு, 4 வாரங்களுக்கு வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்