குண்டுவீச்சில் உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் உடலை சுமந்து சென்ற எஸ்.பி., ஐ.ஜி. முருகன்.. 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

Default Image

வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும் முயற்சியில் நேற்று நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் சிக்கி உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். அவரின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளைக்கு கொண்டு வரப்பட்டு, அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சுப்பிரமணியனின் உடலுக்கு அவரின் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அவரின் இறுதி ஊர்வலத்தில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். மேலும், சுப்பிரமணியனின் உடலை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மற்றும் தென்மண்டல ஐ.ஜி. முருகன் மற்றும் இதர காவலர்கள் சுமந்து வந்தனர். மையனத்தில் அவரின் உடலுக்கு தெண்மணடல ஐஜி முருகன், தமிழக டிஜிபி திரிபாதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அஞ்சலி செலுத்திய நிலையில், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உயிரிழந்த சுப்ரமணியனின் மனைவிக்கு தமிழக டிஜிபி திரிபாதி ஆறுதல் செலுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்