கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற கோரி மக்கள் நடத்திய பெரும் போராட்டத்தில் காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தீர்ப்பை ரத்து செய்யகோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான வழக்கு தற்பொழுதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை வேறு எந்த மாநிலத்திற்கு மாற்றுவதற்கான திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவுவதற்கான கோரிக்கைகள் வந்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை எனவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், நேர்மையான தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தனை ஆண்டுகள் ஸ்டெர்லைட் ஆலை மூடியிருந்தாலும், தூத்துக்குடியில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு பணி வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…