ஸ்டெர்லைட் ஆலையால் தான் தூத்துக்குடி மாசுபாடு அடைந்துள்ளது – மாசுகட்டுப்பாட்டு வாரியம் பதில்!

Published by
Sulai

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் தூத்துக்குடி நகரம் பெரும் மாசுபாடு அடைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை கடந்த வருடம் மூடப்பட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையில் தூத்துக்குடியில் மாசுபாடு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமில்லை என்றும் அனல் மின் நிலையங்களே காரணம்  என்று வேதாந்தா தரப்பு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆஜராகினர். அப்போது பேசிய அவர்கள், தூத்துக்குடியில் கடந்த 1996 ம் ஆண்டு முதல் காற்று மாசுபாடு அடைந்து இருப்பதாக தெரிவித்தனர். இது மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நிரூபிக்கப்பட்டு ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.மேலும்,தூத்துக்குடியில் தற்போது நிலத்தடி நீர் மட்டமும் , காற்றும் பெரும் அளவில் மாசுபாடு அடைந்துள்ளாகவும் இதற்கு ஸ்டெர்லைட் ஆளை தன காரணம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

Published by
Sulai

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago