தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 2ஆம் நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி வன்முறை ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் முழுப் பின்னணி விவரங்களை விரிவாக விசாரித்து தொடர்புடைய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதோடு, விசாரணையை 4 மாத காலத்துக்குள் சிபிஐ முடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது, கொலை மிரட்டல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் நேற்று துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த இன்ஸ் பெக்டர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.இந்நிலையில் இன்று 2ஆம் நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் சேகரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…