தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது…!!!
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு, தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதனையடுத்து நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் துவக்கி வைத்தார். மேலும் கோர்ட்டிற்கு வரும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மூன்று நாட்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படவுள்ளது.