தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்..!

Default Image

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அடுத்த மஞ்சள்நீர் காயல் பகுதியை சேர்ந்த பிரதீஸ். இவர் தனது உறவினரை கொலை செய்ய முயன்ற வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்யும் பொது, அதிகளவில் மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் மயக்கத்தில் இருந்தார். அவரை அரசு மருத்துவமனையில் வைத்து போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும், இன்று அதிகாலையில் மயக்கம் தெளிந்த அவர், மருத்துவமனையில் இருந்து காவலர்களுக்கு தெரியாமல் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, தப்பி ஓடிய பிரதீஸை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், காவலுக்கு இருந்த போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்