முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான, பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையில் உள்ளார்.
அவர்களின் விடுதலைக்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாதங்கள் கடந்த நிலையில், ஆளுநர் கையெழுத்திடாததால் தீர்மானத்தை செயல்படுத்த முடியாமல் உள்ளது.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன், தமிழக எம்பி ரவிக்குமார், பேரறிவாளன் அம்மா அற்புதம்மாள் ஆகியோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்தனர்.
இந்த சந்திபில், தமிழக அரசின் தீர்மானம், ஆளுநர் நடவடிக்கை பற்றிய விவரங்கள் அடங்கிய கோப்புகளுடன் மனு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கூறி உடனடி நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
மாநில ஆளுநர்கள் அனைவரும் உள்துறை அமைச்சர்களின் ஆலோசனை வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுப்பதாலும், மாநில ஆளுநர்களின் நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சர் கவனித்து ஆலோசனை வழங்குவதாலும், மத்திய உள்துறை அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…