கொரோனா சிகிச்சை பெற்று வந்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி கு.பானுமதி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரியான கு.பானுமதி இன்று உயிரிழந்தார். அவருக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு இளையராஜா, மாலதி, இசையமுதன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
அவரின் இறப்புக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, டிடிவி.தினகரன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…