நாளை நாடு முழுவதும் மகளீர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் மகளீர் தின வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘தாய்மையின் பெரும் உருவமான பெண்ணினத்தைப் போற்றி கொண்டாடுகிற உலக மகளிர் தினத்தில் மாதர்குலத்திற்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகிற்கே வழிகாட்டும் வகையில்தமிழ்நாட்டு பெண்களின் உயர்வுக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி இடங்களை பெண்களுக்காக ஒதுக்கி தந்ததால், இன்று ஆயிரக்கணக்கில் பெண் பிரதிநிதிகள் பதவிகளை அலங்கரித்து தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நன்னாளில் அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டுவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அத்தனை வழிகளிலும் பெண்ணினத்தின் மேம்பாட்டிற்காக பாடுபடுவதில் உறுதியோடு இருக்கிறது. சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி ஒவ்வொரு பெண்ணும் உயர்ந்து, சிறந்திட இந்த இயக்கம் துணை நிற்கும்.
சிறப்புமிக்க உலக மகளிர் தினத்தில், பெண்களைக் கொண்டாடுவதை நம் வீட்டில் இருந்து தொடங்குவோம். பிரதிபலன் பார்க்காமல் உழைக்கிற, தியாகத் தழும்புகளைச் சுமக்கிற பெண்குலத்தை எல்லா நாளும் போற்றிடுவோம். பெண்களின் உணர்வுகளை மதித்திட நம்முடைய ஆண் பிள்ளைகளுக்கு கற்றுத் தருவோம். பெண்கள் இல்லாமல் இந்தப் பூவுலகம் இயங்காது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…