தமிழ்நாடு

இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது – அமைச்சர் மா.சுப்ரமணியன்

Published by
லீனா

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் பெய்துள்ள இந்த மழையை இதற்கு முன்னால் பெய்த எந்த மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது .

வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களும் சென்னையில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். டிச.1முதல் 5 ஆம் தேதி வரை  சென்னையில் அதிகபட்சமான மழைப்பொழிவு 5 செ.மீ என்பார்கள். ஆனால், இப்பொது நுங்கம்பாக்கத்தில் 58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 12 மடங்கு கூடுதலாக மழை பொழிந்துள்ளது.

தற்போது மழைநீர் வடிகால்களில் மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. சென்னையில் பிரதான தெருக்களில் மழைநீர் வடிந்துள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி நீர்திறப்பு பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்படுகிறது. இன்னும் சில மணிநேரங்களில், பாதிப்பு உள்ள பகுதிகள் சீரமைக்கப்படும். போக்குவரத்து 60% சீராக உள்ளது. முதல்வர் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றார். அனைத்து இடங்களிலும் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

13 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

13 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

14 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago