ADMK Ex minister Sellur raju [Image source : Twitter/@SellurRajuOffl]
தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்தார். சென்னையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்த நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் நவமணி வேதமாணிக்கம் என்பவர், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேடு காரணமாக தனது தொழில் நிறுவனத்தை மூடி விட்டதாகவும், இதற்கு காரணம் அதிமுக தான் எனவும் குற்றசாட்டியதாக கூறப்பட்டது.
இந்த சம்பவங்களின் தொடர்பாக அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய செல்லூர் ராஜு, தொழிலதிபரை ஏமாற்றிவிட்டார் என செய்தி பரவியதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், தொழிலதிபரை ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு செல்லூர் ராஜு மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக இன்று மதுரை காவல் ஆய்வாளரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார்.
இதன் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 40 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற மோசமான செய்தி வந்துள்ளது. என்னுடைய நேர்மை, உண்மையான பணி உள்ளிட்டவற்றை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த செய்தி உள்ளது. இந்த மோசமான செய்தி என் குடும்பத்தையும், என்னையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. 10 ஆண்டு காலம் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்துள்ளேன்.
அதனால் என்னுடைய நேர்மையையும், நாணயத்தையும் வேறு ஒருவர் சொல்லி தெரிய வேண்டியதில்லை. யார், யார் என்னை பற்றி செய்தி வெளியிட்டார்களோ அவர்கள் மீது புகார் கொடுத்துள்ளேன். தேர்தல் நேரத்தில் இதுபோன்று புகார் கூறப்பட்டுள்ளதில் ஏதோ பின்புலம் உள்ளதாக தெரிகிறது. இது முழுக்க தனது உரிமையை பாதித்த விஷயமாகும். எனவே, தன் மீது தேவையற்ற அவதூறுகளை பரப்பி, பொது வாழ்க்கைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்த நிலையில், இது குறித்து புகார் அளித்துள்ளேன் என கூறினார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…