முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அறிவுரை வழங்கி ட்வீட் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அந்த வகையில், பெரும்பாலன இடங்களில் திமுக வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து, வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தனர். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அறிவுரை வழங்கி ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘வெற்றி பெற்ற பின்னர் நமது பொறுப்பு இன்னும் கூடுதலாகிறது! மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு என்றும் உண்மையுள்ளவர்களாக நாம் பணியாற்றிட வேண்டும்! பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன பாடங்களை வெற்றி பெற்றவர்களுக்கு அறிவுரையாகச் சொல்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…