இது ஆணவ கொலையை ஊக்குவிக்கும் தீர்ப்பு! திருமாவளவன் ட்வீட்!

Default Image

இது ஆணவ கொலையை ஊக்குவிக்கும் தீர்ப்பு.

கடந்த 2015-ம் ஆண்டு வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரும், கௌசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2016 -ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சங்கர் உயிரிழந்துள்ள நிலையில், சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றம் வழங்கியது.

இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம், கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது. மேலும், 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர் தான் ட்வீட்டர் பக்கத்தில், ‘உடுமலைசங்கர் ஆணவக் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளிகள் விடுதலை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆணவக்கொலையை தடுப்பதற்கென்று தனி சட்டம் இல்லாததே இதற்கு காரணம் என்றும், இது ஆணவ கொலையை ஊக்குவிக்கும் தீர்ப்பு.’ என்றும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்