தமிழக அரசின் அலட்சியப்போக்கால் கள்ளக்குறிச்சியில் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி பேட்டி.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் பாதுகாப்பிலும், சட்ட ஒழுங்கு பாதுகாப்பிலும் செயலிழந்துவிட்டது இந்த விடியா அரசு. கள்ளக்குறிச்சி சம்பத்தில் திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் கைதை முன்கூட்டியே செய்திருந்தால், இந்த கலவரத்தை தவிர்த்திருக்கலாம்.
மாணவி உயிரிழந்த பிறகு பதற்றமான சூழ்நிலை நிலவுவது தெரிந்தும், அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் மெத்தனப்போக்கே இப்படிப்பட்ட நிகழ்விற்கு காரணம். பதட்டமான சூழலை உளவுத்துறை மூலம் அறிந்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். பெற்றோர் வைத்த கோரிக்கையை முறையாக விசாரித்திருந்தால் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீசார் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. பெண்கள் பாதுகாப்பில் செயலிழந்துவிட்டது இந்த அரசு, விசாரணையில் எந்த நடவடிக்கை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், அதிமுக அலுவலகத்தில் சமூக விரோதிகள் நுழைவதாக கிடைத்த தகவலின் படி புகாரளித்தோம், பாதுகாப்பளிக்காத ஒரே அரசாங்கம் இந்த அரசாங்கம். ரவுடிகளுக்கும், குண்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்த அரசு இந்த அரசு என கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…