அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ,துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில் , தமிழ்நாட்டின் அரசியல், நேற்று இன்று நாளை என எப்போதும் புரட்சித் தலைவர் எம்ஜிஆரை சுற்றியே சுழலும்.அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் தொண்டனாக இருப்பதே பெருமை.மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுத்து, அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
பல சோதனை, வேதனைகளை தாண்டி, அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றியவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா.தொண்டனின் உழைப்பு, சிந்திய ரத்தம் வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு நலத்திட்டங்களை பெரும் நோக்கத்திற்காக மத்திய அரசை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…