மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சொல்வதற்கான காரணம் இதுதான் – அமைச்சர் செந்தில் பாலாஜி

Published by
லீனா

மானிய மின்சாரம் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு. 

அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் தான் ஆகிறது.

அதற்குள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். மேலும் தமிழ்நாட்டில் இப்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை  இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்போது 2.66 கோடி மின் இணைப்புகள் உள்ளன. தற்போது வரை சுமார் 60 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள மின் இணைப்புகள் ஆதார் என்னுடன் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வரும் டிசம்பர் 35ம் தேதிக்குள் மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலவச மின்சாரம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஒருவர் எத்தனை மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் அத்தனை மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட்  மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இது தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் எதுவும் இல்லை. இருப்பினும் மானிய மின்சாரம் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும் என தெரிவித்துள்ளார். இதற்காக மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

10 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

19 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago