தமிழகத்தில் ஊரடங்கால் கிடைத்த நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பதுதான் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அதில், தமிழகத்தில் ஊரடங்கால் கிடைத்த நன்மைகளில் முக்கியமானது மது இல்லாத தமிழர்களாக நாம் மாறியிருப்பதுதான் என்றும் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கிடைத்திருக்கும் இதுதான் சிறந்த வாய்ப்பு என்று கூறியுள்ளார். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்துகொண்ட நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் என்றும் தமிழகத்தின் அனைத்து மக்களின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப்போல கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது சாத்தியமானது என்று நிரூபித்துள்ளது. கடந்த 32 நாட்களாக தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறியுள்ளார். இதனால் தமிழகம் மது இன்றி மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…