இதான் நம்ம ஊரு.! போராட்டங்களுக்கு இடையையும் ஐயப்ப பக்தர்களுக்கு வழிவிட்ட இஸ்லாமிய நண்பர்கள்.!

Default Image
  • குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
  • நேற்று கோவையில் இஸ்லாமியர்கள் பங்குபெற்ற CAA எதிர்ப்பு போராட்டம் வழியாக வந்த ஐயப்பன் பக்தருகளுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் வழிவிட்டு அனுப்பி வைத்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கோவையில் இஸ்லாமியர்கள் பங்குபெற்ற CAA எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டக் களத்தின் வழியாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வந்துள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர் ஒருவர் போராட்ட களத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் அவர்களுக்கான வழியை ஏற்படுத்தி ஐயப்பன் பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் அனுப்பி வைத்தார்.

பின்னர் அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிவருகிறது. இதை பார்த்தவர்கள், இதுதான் மதம் தாண்டிய மனிதன் என்றும் எல்லா இறைவனும் மனிதத்தை தான் போதிக்கிறான் என்பதை இந்த வீடியோ தெளிவாக கூறுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்