என் மீது தேசத்துரோக வழக்கு போடுவது புதிது அல்ல. 3-வது முறையாக போட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கையும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரடங்கால் வறுமையில் வாடும் இவர்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், உதவி கேட்டுள்ளனர். இதனையடுத்து, சீமான் அந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.
அதன் பின் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய சீமான், தி.மு.க.வினர் மதுவுக்கு எதிராக போராடுவது வேடிக்கையாக உள்ளது. அதிக சாராய ஆலைகள் வைத்திருப்பது அவர்கள் தான். நாங்கள் அரசுக்கு சாராயத்தை விநியோகிக்க மாட்டோம். சாராய ஆலைகளை மூடுவோம் என்று அவர்கள் சொல்லவே இல்லையே. இது மலிவான அரசியல் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என் மீது தேசத்துரோக வழக்கு போடுவது புதிது அல்ல. 3-வது முறையாக போட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கையும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன் என்றும், மத்திய சுகாதாரத்துறை மந்திரி கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். இதை ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…