இது பேரணி அல்ல, போர் அணி – மு.க.ஸ்டாலின்

Default Image
  • குடியுரிமை சட்டத்தை எதிர்த்து  தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற்றது.
  • இது பேரணி அல்ல ,போர் அணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இன்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி  நடைபெற்றது.சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது.இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர்  திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.இதன் பின்பு  ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் கூட்டாக பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதன் பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இது பேரணி அல்ல ,போர் அணி. இதோடு நிறுத்தி கொள்ளாமல் கொடிய சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வில்லை என்றால் கூட்டணி கட்சி தலைவர்களோடு கட்சிக்கு அப்பாற்பட்ட தலைவர்களை ஒன்றிணைத்து மிக பெரிய போராட்டத்தை நடத்துவோம்.10000-க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் இந்த பேரணியில் பங்கேற்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.மேலும் விளம்பரம் கொடுத்த அதிமுக அரசுக்கும் எனது நன்றி என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்