“கொரோனாவை விரட்ட விளக்கு பிடித்து, கை தட்டியதை விட இது கேவலமான செயல் அல்ல!”- உதயநிதி ஸ்டாலின்

Default Image

கொரோனாவை விரட்ட விளக்கு பிடித்து, கை தட்டியதை விட இது கேவலமான செயல் அல்ல என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் அவர், I am a தமிழ் பேசும் indian என பதியப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். அவரது உடன் இருந்தவர் hindi theriyaathu poda (ஹிந்தி தெரியாது போடா) என பதியப்பட்ட டி சர்ட் அணிந்திருந்தார்.

இந்த புகைப்படம், இணையத்தில் மிகவும் வைரலானதை தொடர்ந்து, #ஹிந்தி_தெரியாது_போடா எனும் ஹேஸ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியது. அதனைதொடர்ந்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் கொண்ட டி-சர்ட்டை அணிந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், இதுகுறித்து தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், தமிழை வளர்ப்பதற்கு டீ-ஷர்ட் போடவில்லை எனவும், இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கே நாங்கள் டீ ஷர்ட் போட்டோம் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கொரோனாவை விரட்ட விளக்கு பிடித்து, கை தட்டியதை விட இது கேவலமான செயல் அல்ல என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்