“இது மிகவும் கொடூரமானது;மதச்சார்பின்மைக்கு எதிரானது” – மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

Published by
Edison

மதுரை:நவராத்திரி விழாவை முன்னிட்டு போடப்பட்ட உத்தரவு;இனி இதுபோன்ற தவறு நடக்காது என எம்பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு யூனியன் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

நவராத்திரி விழாவை கொண்டாடும் வகையில், ஒன்பது வண்ண ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று யூனியன் வங்கி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதற்கும்,மேலும்,அவ்வாறு கடைபிடிக்காதவருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று கூறி,யூனியன் வங்கி தலைவருக்கு சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“ஒன்பது வண்ண ஆடைகளை அணிந்து நவராத்திரி விழாவை கொண்டாடும் வகையில், ஊழியர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, டிஜிட்டேஷன்,மத்திய அலுவலகத்தின் அதிகாரி ஸ்ரீ ஏ.ஆர்.ராகவேந்திரா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் பரிந்துரைத்த நாட்களில் விடுமுறை நாட்களும் அடங்கும்.

இது மிகவும் கொடூரமானது மற்றும் அனைத்து விதிமுறைகளையும் மீறி சுற்றறிக்கையை வெளியிட யார் அதிகாரம் அளித்தார்கள்? என்று எனக்குத் தெரியவில்லை. இது அரசு நடத்தும் வங்கியின் இமேஜை மட்டும் சேதப்படுத்தாமல், இந்த மாபெரும் நாட்டின் மனித உரிமைகள் மற்றும் மதச்சார்பற்ற மதிப்புகளை மீறுவதாகும்.

எனது கருத்துக்களுடன் நீங்கள் உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன் மற்றும் மேலே உள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவதற்கும், தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,இனி அத்தகைய தவறு நடக்காது என யூனியன் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக,எம்பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் யூனியன் வங்கி பொதுமேலாளர் கூறியிருப்பதாவது:

“வங்கியின் எந்தவொரு ஊழியர்களுக்கும் நிறம் மற்றும் உடையின் அடிப்படையில் நிபந்தனைகளை விதிப்பதும்,அதனை பின்பற்றாததற்கு அபராதம் வசூலிப்பதும் மதச்சார்பற்ற மனப்பான்மைக்கு எதிரானது என்ற உங்கள் உணர்வுகளை நாங்கள் எதிரொலிக்க விரும்புகிறோம்.ஆனால், வங்கி அனுப்பிய அந்தக் கடிதம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக சம்மந்தப்பட்ட அதிகாரி உறுதியளித்துள்ளதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களைக் கையாள்வதில் கவனமாக இருக்கவும் அவருக்குத் தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

ஆண்ட்ரே ரஸ்ஸலை எப்படி யூஸ் பண்றீங்க? டென்ஷனாகி கேள்வி எழுப்பிய அனில் கும்ப்ளே!

ஆண்ட்ரே ரஸ்ஸலை எப்படி யூஸ் பண்றீங்க? டென்ஷனாகி கேள்வி எழுப்பிய அனில் கும்ப்ளே!

கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…

30 minutes ago

கூடுகிறது சட்டப்பேரவை…எரிசக்தித்துறை, மதுவிலக்கு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடும் செந்தில் பாலாஜி!

சென்னை :  கடந்த மாதம் 14-ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…

1 hour ago

பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! நடந்தது என்ன?

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…

2 hours ago

“தமிழக அரசே என்னை தான் ஃபாலோ பண்றாங்க.” சீமான் பரபரப்பு பேட்டி!

கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…

2 hours ago

குஜராத்திடம் தோல்வி அடைந்த கொல்கத்தா! இதை செஞ்சிருந்தா வெற்றிபெற்றிருக்கலாம்…

கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…

2 hours ago

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

9 hours ago