மத சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையேயான தேர்தல் இது – திருமாவளவன்..!

Published by
murugan

இந்த தேர்தலை மத சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையேயான தேர்தலாக பார்க்கிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சென்று முக ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் என்பது 2 அணிகளுக்கான பதவிக்கான போட்டி அல்லது அரசியல் அதிகாரத்திற்க்கான போட்டி என்று நாங்கள் பார்க்கவில்லை. மத சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையேயான தேர்தலாக பார்க்கிறோம்.

சமூக நீதியை பாதுகாக்க, ஜனநாயகத்தை பாதுகாக்க, மத சார்பின்மையை பாதுகாக்க திமுக தலைமையிலான இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி களமிறங்குகிறது. இந்த மண்ணில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை வாரிசு முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்கிற வகையில் தமிழ்மண்ணை சமூகநீதி மண்ணாக பக்குவப்படுத்தியுள்ளார்கள்.

இதனால் தான் கடந்த அரைநூறு ஆண்டுகளுக்கு மேலாக இங்கே சாதி, மத வெறியர்களுக்கு அரசியல் களத்தில் கால் ஊன்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டது என தெரிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

13 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

39 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago