தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்ட்டின் இன விலங்கு இதுதான்.
நீலகிரியின் சாய்வான பச்சை மலையடிவாரத்தில், கருப்பு நிறத்துடன் ஒரு விலங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறது. இதனை முதலில் பார்க்கும் போது, கரும்புலி போல தோன்றுகிறது. இதனை தூரத்தில் இருந்து பார்க்கும் போது, புலி போன்றோ அல்லது கரும்புலி போன்றோ தோன்றுகிறது.
ஆனால், அதனை தெளிவாக கேமராவை ஜூம் செய்து பார்க்கும் போது தான் அது வேறொரு விலங்கு என தெரிய வருகிறது. இந்த விலங்கின் பெயர் கரும்வெருகு அல்லது நீலகிரி மார்ட்டின். தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்ட்டின் இன விலங்கு இதுதான். இவை மாமிச உண்ணிகள் என்று அறியப்படுகிறது.
இந்த விலங்கானது தென்னிந்தியாவில் நீலகிரி மலைகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. கேமராவில் சிகிரியுள்ள இந்த விலங்கின் வீடியோவை, இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இந்த வீடியோவை பதிவிட்டு, ‘”இது நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளாக் பாந்தர் அல்ல. இது நீலகிரி மார்டன், மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறு பகுதிகளில் தென்படுகிறது. இது ஆபத்தில் இருக்கும் மற்றும் அழிந்து வரும் ஒரு ஆர்போரியல் விலங்கு. தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்டன் இனம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் இந்த வீடியோ, கிட்டத்தட்ட 31,000 பார்வைகளையும், நூற்றுக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமென்டுகளைப் பெற்றுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…