தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்ட்டின் இன விலங்கு இதுதான்.
நீலகிரியின் சாய்வான பச்சை மலையடிவாரத்தில், கருப்பு நிறத்துடன் ஒரு விலங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறது. இதனை முதலில் பார்க்கும் போது, கரும்புலி போல தோன்றுகிறது. இதனை தூரத்தில் இருந்து பார்க்கும் போது, புலி போன்றோ அல்லது கரும்புலி போன்றோ தோன்றுகிறது.
ஆனால், அதனை தெளிவாக கேமராவை ஜூம் செய்து பார்க்கும் போது தான் அது வேறொரு விலங்கு என தெரிய வருகிறது. இந்த விலங்கின் பெயர் கரும்வெருகு அல்லது நீலகிரி மார்ட்டின். தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்ட்டின் இன விலங்கு இதுதான். இவை மாமிச உண்ணிகள் என்று அறியப்படுகிறது.
இந்த விலங்கானது தென்னிந்தியாவில் நீலகிரி மலைகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. கேமராவில் சிகிரியுள்ள இந்த விலங்கின் வீடியோவை, இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இந்த வீடியோவை பதிவிட்டு, ‘”இது நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளாக் பாந்தர் அல்ல. இது நீலகிரி மார்டன், மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறு பகுதிகளில் தென்படுகிறது. இது ஆபத்தில் இருக்கும் மற்றும் அழிந்து வரும் ஒரு ஆர்போரியல் விலங்கு. தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்டன் இனம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் இந்த வீடியோ, கிட்டத்தட்ட 31,000 பார்வைகளையும், நூற்றுக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமென்டுகளைப் பெற்றுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…