இன்று கலைஞர் அரங்கில் “திருவாரூர் முத்துவேல் கருணாநிதி” நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவலாயத்திலுள்ள கலைஞர் அரங்கில் “திருவாரூர் முத்துவேல் கருணாநிதி” நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழா மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.
இதுகுறித்து திமுக எம்எல்ஏ எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவலாயத்திலுள்ள கலைஞர் அரங்கில், கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வாழ்த்துரை கொண்ட இந்நூலினை, கழக இளைஞர் அணிச் செயலாளர், இளந்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட, மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
அவ்வமயம், நக்கீரன் ஆசிரியர் திரு. நக்கீரன் கோபால் அவர்களும், திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்குகின்றனர். நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னணியினர் மற்றும் சீர்மிகு பெருமக்கள் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…
சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள்.…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ஹைதராபாத் : பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும்…
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…