கிரிவலத்திற்கு செல்ல தடை.! திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வருடம் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் சித்திரை மாத பௌர்ணமியான சித்ராபௌர்ணமியில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை செல்வர்.
ஆனால், இந்த வருடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வருடம் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிவலத்திற்கு பக்தர்கள் வர உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். நாளை மறுநாள் வரவுள்ள சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் 6ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையில் இந்த தடை இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025