திருவள்ளூர் மாணவி தற்கொலை விவகாரம் – சிபிசிஐடிக்கு மாற்றம்

Default Image

திருவள்ளூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் வடுக்களே இன்னும் மறையாத நிலையில், திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவியின் மரணத்தை தொடர்ந்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கு பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுரசுந்தரி தலைமையில் அதிகாரிகள் பள்ளி, விடுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்