திருவள்ளூரில் மேலும் 75பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 270ஆக உயர்வு !

திருவள்ளூரில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி, மொத்த எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், நேற்று (மே 8) மட்டும் 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 399 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மொத்தம் 3043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திருவள்ளூரில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 270ஆக பேர் உயர்ந்துள்ள நிலையில் 216 கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.