திருவள்ளூரில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 495ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொரோனா தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 64 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிக பாதிக்கப்பட்ட சென்னையில் நேற்று மேலும் 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 5, 637ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூரில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 495ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் 80 பேர் குமணமடைந்துள்ள நிலையில் 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…