துப்பாக்கி சூடு விவகாரம்.! எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!

Published by
மணிகண்டன்

எம்.எல்.ஏ இதயவர்மனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும்  திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும்  இடையே நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் இதயவர்மன் குமாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும், எம்.எல்.ஏ மீது ஐந்து பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை போலீசாரால் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யபப்ட்டுள்ளார்.

எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை நீதிபதி காயத்ரி தேவி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர் எம்.எல்.ஏ என்பதால், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தற்போது மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருகிறது. இந்த மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் அவர்களும் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

10 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

12 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

12 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

14 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

15 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

16 hours ago