ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நன்றி தெரிவித்த திருமாவளவன்…!

Default Image

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து திருமாவளவன் அவர்கள் ட்வீட். 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்கர் கோணசீமா என பெயர் வைப்பதற்கான தீர்மானத்தை அம் மாநில அமைச்சரவையில் நிறைவேற்றியுள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சாதியவாத சனாதனிகளின் வன்முறைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல், எடுத்த முடிவில் உறுதியாக நின்று ஆந்திர அமைச்சரவையில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ள அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! மனமார்ந்த நன்றி!வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்