தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்…!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்.

தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா பேரவையில் நிறைவேற்றபட்டது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீட் விலக்கு மசோதாவைத் தாக்கல் செய்து இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் நல்லாட்சி நடத்தும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்