தமிழகத்தை பாஜக குறிவைத்துள்ளது.! குட்டிக்கரணம் அடித்தாலும் அது பலிக்காது.! திருமாவளவன் பேச்சு.!

Default Image

2024 நாடுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே, பாஜக தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் பாஜக திட்டம் பலிக்காது என திருமானவளவன் சென்னையில் பேசினார்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இறகு பந்து போட்டி தொடர் நடைபெற்றது. இதில் இறுதி போட்டியை விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

இறுதி போட்டி முடிந்து வெற்றியாளர்களுக்கு கோப்பையை வழங்கினார் திருமாவளவன். அதன் பிறகு மேடையில் பேசிய திமுமாவளவன் பல்வேறு குற்றசாட்டுகளை பாஜக மீது வைத்துள்ளார்.

அவர் பேசுகையில், ‘வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தை குறிவைத்துள்ளது. அதன் காரணமாக தான் தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ‘ என குற்றம் சாட்டினார்.

மேலும், ‘ அவர்கள் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும், பாஜகவினரின் திட்டம் பலிக்காது. ‘ எனவும் திருமாவளவன் பொடியள் பேசி முடித்தார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்