விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு… என்னென்ன வாக்குறுதிகள்?

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024: மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.

நாடாளுமன்ற மக்களவை 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் தேர்தல் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் விசிகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இதற்கு முன்பு திருமாவளவன் பேசியதாவது, பாஜகவுக்கு எதிரான திமுகவின் முயற்சிக்கு எப்போதும் விசிக துணை நிற்கும். மத்திய பாஜகவை வீழ்த்துவதே எங்களது ஒரே இலக்கு. வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெரும் என தெரிவித்தார்.

விசிக தேர்தல் வாக்குறுதிகள்:

  • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி நகர்ப்புறங்களில் விரிவுபடுத்தப்படும். மேலும் சம்பளத்தை அதிகரிக்க விசிக குரல் கொடுக்கும்.
  • ஆவண கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றவேண்டும்.
  • வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும்.
  • ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு.
  • ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ரத்து.
  • கல்வி, விவசாய கடன் ரத்து.
  • நீட் தேர்வு ரத்து.
  • இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, அனைத்து மொழிகளின் நலன் பாதுகாக்க குரல் எழுப்பப்படும்.
  • ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க கூடாது.
  • ஆளுநர் பதவி ஒழிக்க வேண்டும்.
  • அனைத்து மாநில மொழிகளிலும் அம்பத்கர் நூல்கள்.
  • தனியார்மயமாக்குவதை கைவிடுதல்.
  • கச்சத்தீவு மீட்க குரல் எழுப்பப்படும்.
  • மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை.
  • பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு.
  • ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை.
  • தேர்தல் ஆணையர் திருத்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • பட்டியலின, பழங்குடி சமூகத்தினருக்கு தனி வங்கி அமைக்க வேண்டும்.
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
  • உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.
  • ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழலை விசாரணை நடத்த வேண்டும்.
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க குரல் கொடுப்போம்.

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

10 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

11 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

12 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago