திருமங்கலம் தொகுதியில் ஒரே எண்ணில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததால் வாக்கு எண்ணும் மையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகின்றன.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,அதன் பின்னர் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.
அதில்,தற்போது வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக 153 தொகுதிகளிலும்,அதிமுக 80 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்த நிலையில்,திருமங்கலம் தொகுதி செங்கப்பட்டையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 132 என்ற எண் கொண்ட மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான 760 வாக்குகள் எண்ணப்பட்டு இருந்த நிலையில்,மற்றொரு இயந்திரத்திலும் 132 என்ற எண் இருந்ததால்,வாக்கு எண்ணும் மையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே இதுபோன்ற சர்ச்சைகள் இன்று காலை முதல் சில வாக்கு எண்ணும் மையங்களில் நடந்துள்ளது.
மேலும்,திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் 8 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார்,தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.மணிமாறனை விட 661 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்து வந்தார் என்பது குறிபிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…