கனமழையால் சேரும், சகதியுமாக மாறிய திருமழிசை காய்கறி சந்தை.!

Default Image

சென்னையில் பெய்துவரும் மழை காரணமாக தமிழிசை மொத்தம் காய்கறி மார்க்கெட் வெள்ளக்காடாக மாறியது. 

சென்னையில் நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது, ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தமிழிசையில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் வாகன போக்குவரத்து மற்றும் காய்கறி விற்பனை பெரிதும் பதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காய்களை தேக்கி வைக்க போதிய இடம் இல்லாததால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டன் கணக்கான காய்கறிகளின் அழுகியதாக கூறப்படுகிறது. மேலும் மழையினால் வியாபாரிகள் சந்தைக்கு வருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருச்சி, நாகை, தஞ்சை, கரூர் மாவட்டங்களில் கனமழை மேலும் நாமக்கல், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பேசியது வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்