ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவு…. இன்று காலை 10 மணிக்கு தொடக்கம்… தேவஸ்தானம் அறிவிப்பு….

Default Image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு முன்பதிவு இன்று  தொடங்குகிறது.

திருவேங்கடப்பதி எனப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பரவிவந்த  கொரோனா  காரணமாக பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு  தளர்வுக்கு பிறகு  கடந்த ஜூன் 11ம் தேதி முதல்  தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக ₹300 டிக்கெட் மூலம் தினமும் 13 ஆயிரம்  டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. அதில், இம்மாதம் 30ம் தேதி வரைக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவின் மூலம் விற்கப்பட்டு விட்டன.  இந்நிலையில், அக்டோபருக்கான 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று காலை 11 மணி முதல்   https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என தேவஸ்தான அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்