திருக்கார்த்திகை தீப திருநாள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
திருக்கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
இன்று திருக்கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘அனைவரின் வாழ்விலும் இன்னல்கள் என்னும் இருள் நீங்கி, அன்பின் ஒளி பரவி, மகிழ்ச்சி, செல்வம், பூரண உடல் நலம் என்னும் இன்ப ஒளி அனைவரிடத்திலும் மிளிரட்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
அனைவரின் வாழ்விலும் இன்னல்கள் என்னும் இருள் நீங்கி, அன்பின் ஒளி பரவி, மகிழ்ச்சி, செல்வம், பூரண உடல் நலம் என்னும் இன்ப ஒளி அனைவரிடத்திலும் மிளிரட்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/VrCbghc3H1
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 6, 2022