நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி ‘திருகாணி’.! அரசு மருத்துவர்களுக்கு சவால்..பின்னர் நடந்தது என்ன.?

Published by
பாலா கலியமூர்த்தி
  • புதுக்கோட்டை மாவட்டம் புஷ்பம் என்பவருக்கு திடீரென, இருமும் போது சளியில் ரத்தம் வந்ததால், உடனே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
  • பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வலது நுரையீரலின் நடுப்பகுதிக்குச் செல்லும் மூச்சுக்குழாயில் திருகாணி இருப்பதை கண்டறிந்து, பிறகு அதை லாவகமாக முறையில் அகற்றப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டம்மாள் விடுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மனைவி புஷ்பம். கடந்த சில தினங்களாகவே இவருக்கு வறட்டு இருமல் இருந்துள்ளது. இதற்கு வெளியில் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென, தொடர்ந்து இருமும் போது சளியில் ரத்தம் வந்ததால், உடனே புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வலது நுரையீரலின் நடுப்பகுதிக்குச் செல்லும் மூச்சுக்குழாயில் ஏதோ ஒரு சிறிய பொருள் அடைத்திருப்பதைக் கண்டறிந்தனர்.

அதை தொடர்ந்து உடனே சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அது மூக்குத்தியில் இருக்கும் திருகாணி என்பதும், இதனால் தான் நுரையீரல் சரிவர வேலை செய்யாமல் சுருங்கி இருப்பதும் தெரியவந்தது. திருகாணியை அக நோக்கி வழியே சிறிய இடுக்கி போன்ற ஒரு கருவியை மூச்சுக்குழாய்க்குள் செலுத்தி ஆணியின் நுனிப்பகுதியை இருகப் பிடித்து அகற்றினர். திருகாணியை எடுத்ததற்குப் பிறகு நோயாளி நலமுடன் இருக்கிறார்.

இதுபற்றி மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், பொதுவாக இதுபோன்ற உலோகப்பொருள்கள் மூச்சுக்குழாய்க்குள் உள்ளே சென்று அடைக்கும்போது உடனடியாக இருமலும், தும்மலும் வரும் இதன்மூலம் உள்ளே உலோகப்பொருள் இருப்பது கண்டறியப்படும். ஆனால், இவருக்கு திருகாணி மட்டும் கழன்று வலதுபக்க நுரையீரலின் நடுப்பகுதிக்குச் செல்லும் மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக் கொண்டிருந்துள்ளது. மூக்குத்தி வெளியில் கழன்று விழுந்ததால், திருகாணி உள்ளே சென்றது அவருக்குத் தெரியவில்லை.

மேலும்  திருகாணியை அகற்றாமல் விட்டால், மூச்சுக்குழாய் பகுதி சீல் பிடித்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் இருந்தது. இதுபோன்ற நிலையில், பெரும்பாலும் மார்புப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். ஆனால், புஷ்பாவுக்கு மூச்சுக்குழாய் வழியாக உணர்வை அகற்றி மருந்தைச் செலுத்தி திருகாணியை அகற்றிவிட்டோம். நோயாளி தற்போது நலமுடன் இருக்கிறார். இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் சுமார் 2 லட்ச ரூபாய்க்கு அதிகமாகத் தான்  இருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் இலவசமாகச் செய்யப்பட்டது என குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மிரட்டிய டிரம்ப்? “கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாங்கள் தயார்!” உக்ரைன் அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் : கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர்…

29 minutes ago

நாங்க வரல., முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்! புறக்கணித்த கட்சிகள்..,

சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…

1 hour ago

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

11 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

13 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

14 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

14 hours ago