தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் காலுன்ற நினைப்பது நடக்காது – வைகோ

Default Image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மண்ணிருக்கும் வரை சி.பா.ஆதித்தனாரின் புகழ் இருக்கும்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறினார். இதையடுத்து பேசிய வைகோ, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அருமையாகவும், சிறப்பாகவும் வழிநடத்தப்படுகிறது. அதை சீர்குலைக்க பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் காலுன்ற நினைக்கிறார்கள். அது நடக்காது எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்