இருசக்கர வாகனங்களை திருடி ,அதை விற்று உல்லாசமாக இருந்த கள்ளக்காதலர்கள்!

Published by
Sulai

திருப்பூரில் உள்ள தெற்கு பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இன்ஸ்பெக்ட்டர் அண்ணாதுரை தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஜூலை 3-ம் தேதி இரவு ஒரு பெண்ணும் ஆணும் வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனர்.சந்தேகம் அடைந்த காவல் துறையினர்,அவர்களை அழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்கள் தாங்கள் கணவன்-மனைவி என்றும் அங்குள்ள ஒரு பனியன் கம்பேனியில் வேலைபார்த்து வருவதாகவும் கூறியுள்ளனர்.மேலும் காவல் துறையினர் கேட்ட கேள்விக்கு திக்கி தடுமாறியவாறு பதில் அளித்துள்ளனர்.

மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்துள்ளனர்.அப்போது இருவரும் PKR காலனியை சேர்ந்த லோகநாதன், கல்லாங்காட்டை சேர்ந்த சுதா என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கும் கள்ளக்காதல் ஜோடி என்றும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரிய வந்துள்ளது.மேலும் பெண்ணுடன் வருவதால் காவல்துறையினருக்கு சந்தேகம் வராது என்று எண்ணியதாகவும் கூறியுள்ளனர்.

இவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கைக்காக இரு சக்கர வாகனங்களை திருடி விற்று அதில் வரும் பணத்தை வைத்து  உல்லாசமாக இருந்துள்ளனர்.மேலும் அவர்கள் விற்ற மற்றும்  பதுக்கி வைத்திருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து இரு கள்ளக்காதலர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Recent Posts

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!

அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…

15 minutes ago

திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…

19 minutes ago

பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு இத்தனை கோடி செலவா? இயக்குநர் போட்டுடைத்த உண்மை!

சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…

48 minutes ago

இபிஎஸ்-க்கு ‘ஷாக்’? அதிமுக வழக்கு விசாரணைக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…

1 hour ago

“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…

2 hours ago

“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !

காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…

2 hours ago