சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் 93 வயதான முதியவர். இவர் மீன்வளத் துறையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 1980-ம் ஆண்டு தான் ஓய்வு பெற்றார். அவரது வீட்டிற்கு அருகிலுள்ள இந்தியன் வங்கிக்கு தனது பென்ஷன் பணத்தை எடுப்பதற்காக சென்றிருந்தார். அப்போது தலைகவசத்தை அணிந்து கொண்டு எதிரில் வந்த ஒருவர், சதாசிவத்தை ஏற்கனவே தெரிந்தவர் போல் நலம் விசாரித்தார். பின்பு எங்கு செல்ல வேண்டும் என்று கேட்ட அந்த நபர், அருகில் உள்ள வங்கிக்கு செல்வதாக கூறினார் சதாசிவம்.
இந்நிலையில், வங்கிக்கு சென்று ரூ.20 ஆயிரம் எடுத்து கொண்டு திரும்பிய போது, பின் தொடர்ந்து கவனித்த அந்த நபர், திரும்பவும் அந்த முதியவரை சந்தித்தார். தனக்கு வந்த வேலை முடிந்துவிட்டது, வீட்டு வழியாக தான் செல்கிறேன், வண்டியில் ஏறுங்கள் தாத்தா என கூப்பிட்டார். இதை நம்பி, தனது குடும்பத்தினருக்கு தெரிந்த நபராக இருக்கும் என நினைத்து அவருடன் சதாசிவம் சென்றார். வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு அந்த நபர் சென்ற பிறகு கைப்பையை பார்த்த போது தான் ரூ.20 ஆயிரம் அந்த நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் விசாரணை நடத்தி வரும் போலீசார், சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள அந்த நபரின் அடையாளங்களை வைத்து தேடி வருகின்றனர். போலீஸ் கூறுகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் முதியவர்களை அணுகி பாசமாக பேசி உதவுவது போல் சிலர் பணம் திருடி வருகிறார்கள், தெரியாத நபர் யாரும் தானாக முன்வந்து உதவி செய்வதாக கூறினால் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதே வேளையில் நகை, பணத்துடன் வெளியில் செல்லும் முதியவர்களுடன் குடும்பத்தினர் யாராவது உடன் சென்றால் இது போன்ற மோசடி வழிகளை தவிர்க்கலாம் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…